செவ்வாய், 1 மார்ச், 2011

சேக்கிழார் பெருமான்

தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடி
கடக்களிற்றை கருத்துள் இருத்துவாம்
- சேக்கிழார்

நண்பர்களே பொதுவாக வலைத்தளத்தில் தமிழில் பக்தி சம்பந்தமான பதிவுகள் மிக குறைவாகவே காணபடுகின்றன, ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் வாழ்ந்த நம் பாரத புண்ணிய பூமியில் பக்தி மார்க்கத்தில் மிதமிஞ்சிய பக்தியை இறைவன்பால் செலுத்திய பக்திமான்கள் எண்ணிலடங்காதவர்கள். அவர்களின் வரலாற்றினை நாம் படிக்கும் பொழுது கல் போன்ற மனமும் கரையும். அந்த பக்திமான்களை சைவம் நாயன்மார்கள் என்று போற்றுகிறது, வைணவம் ஆழ்வார்கள் என்று துதிக்கிறது. நாயன்மார்களும், ஆழ்வார்களும் சித்தர்களின் பூமியான தமிழகத்தில் தோன்றி தூய்மையான பக்தியின் மூலம் இறைவன்பால் இரண்டற கலந்தனர். அம்மகான்களின் வரலாற்றினை சொல்வது பெரிய புராணமும், திவ்விய பிரபந்தமும் ஆகும்.
அறுபத்து மூவர் வரலாற்றினை தொகுத்த சேக்கிழார் பெருமானின் கதையிலிருந்து இந்த வலைதளத்தினை எல்லாம்வல்ல குருநாதர் ஸ்ரீ அகஸ்தியம்பெருமானின் திருவருளினால் துவங்குகின்றேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக